தயாரிக்கும் அளவு: 1 படி கொள்ளவு
தேவையான பொருட்கள்:எலுமிச்சை - 1/2 கிலோ வெந்தையம் - ஒரு
தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி கடுகு - 1/4 தேக்கரண்டி காய்ந்தமிளகாய்
- 10 கருவேப்பில்லை - 10 இலைகள் எண்ணெய் - 50 மில்லி இஞ்சி - 1
பல்லு பெருங்காய பொடி - 1 தேக்கரண்டி புளி தண்ணீர் - 2 புளி எலுமிச்சை
சார் - 1/4 தேக்கரண்டி மஞ்சள் பொடி - 10 கிராம் தயாரிக்கும்
முறை:- எலுமிச்சை விருப்பத்திற்கு ஏற்றவாறு சிறு துண்டுகளாக
நறுக்கி கொள்ளவும்.
- வாணலியில்
தேவையான உப்பு, மஞ்சள் அளவுடன் மெதுவான சூட்டில் வதக்கவும்.
- மின்
அம்மியில் அல்லது பாக்கு உரல் வைத்து தேவையான அளவில் பசை செய்து கொள்ளவும்.
ஊறுகாய்
மசாலா தயாரிக்கும் முறை:- வெந்தையம், ஜீரகம், கடுகு,
காய்ந்தமிளாகாய் உடன் வானலியில் வதக்கவும்.
- பிறகு மின்அம்மி வைத்து
பொடியாக அடித்து வைத்து கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய்
ஊற்றவும்.
- சீரகம், கடுகு, வெந்தையம் மற்றும் கருவேப்பில்லை
சேர்க்கவும்.
- அதோடு இஞ்சி, பெருங்காயப்பொடியை சேர்க்கவும்.
- அதோடு
புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- அதோடு மேலே தயாரித்த
பசையை சேர்க்கவும்.
- சிறிது நேரம் மெல்லிய தீயுடன் வைக்கவும்.
- இதோடு
அரைத்த பொடியை சேர்த்து கொள்ளவும்.
- இதோடு எலுமிச்சை சாற்றை
சேர்க்கவும்.
அடைப்பனுக்குள் வைக்கும் முன் இரண்டு நாட்கள்
காற்றாட விடவும். சுவையான எலுமிச்சை ஊறுகாய் தயார். ஒரு மாதத்திற்குள்
பயன்படுத்தி முடிக்கவும். |