தேவையான பொருட்கள்:பால் - 200 மில்லி பச்சரிசி - 1 படி வெள்ளம் - 1/2 கிலோ முந்திரி அரிசி - 100 கிராம் ஏலக்காய் - 4 காய் திராட்சை - 50 கிராம் தேங்காய் - 1 மூடி (1/2 தேங்காய்) கடலை பருப்பு - 200 கிராம் நெய் - 100 கிராம் உப்பு - தேவைகேற்ப (1 தேக்கரண்டி) சமைக்கும் முறை:- இரண்டு படி தண்ணீர் தை பொங்கலிடும் பாத்திரத்தில் கொதிக்க விடவும்.
- அதனுடன் பாலை சேர்க்கவும்.
- பால் பொங்கியவுடன் (பொலி பொலி பொங்கலே போங்கா, கோவிந்தா கோவிந்தா என்று ஆரவாரம் செய்யவும்) [அடுத்த வீட்டுக்காரர்களை அனுசரிக்கவும்]
- கடலை பருப்பை அதனுடன் சேர்க்கவும்.
- மறுபடியும் பொங்க விடவும்.
- அதனுடன் பச்சரிசி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- இதனுடன் வெள்ளம், முந்திரி அரிசி, தேங்காப்பூ, திராட்சை, நெய் சேர்த்து கொதிக்க விடவும்.
- கடைசியாக ஏலக்காய் சேர்த்து ஒரு கிண்டு கிண்டி, மஞ்சள் கொத்து கட்டி அடுப்பை விட்டு இறக்கவும்.
- சூரிய பகவானை வழிபட சர்க்கரை பொங்கல் தயார்.
|