பரிமாறும் எண்ணிக்கை: 4 நபர்கள்தேவையான பொருட்கள்:தக்காளி - 1 எண்ணிக்கை பூண்டு - 1 பள் சீரகம் - 1/2 தேக்கரண்டி சோம்பு (பெருஞ்சீரகம்) - 1/2 தேக்கரண்டி மிளகு - 5 எண்ணிக்கை மஞ்சள்பொடி - 1/4 தேக்கரண்டி எண்ணெய் - 1 தேக்கரண்டி கடுகு - 1/4 தேக்கரண்டி கருவேப்பில்லை - 3 இலைகள் மல்லிதழை - தேவைகேற்ப முழு பட்டமிளகாய் - 2 எண்ணிக்கை உப்பு - தேவைகேற்ப சமைக்கும் முறை:- சோம்பு, சீரகம் நன்றாக போடி செய்து கொள்ளவும்.
- மிளகை இடித்து அந்த பொடியுடன் சேர்க்கவும்.
- அந்த பொடியுடன் தட்டிய பூண்டை சேர்க்கவும்.
- தண்ணீருடன் தக்காளியை சேர்த்தது கரைத்து கொள்ளவும்.
- அதனுடன் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கொள்ளவும்.
- அதனுடன் மேலே அரைத்த பொடியை சேர்த்து கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு போட்டு வெடிக்க விடவும்.
- அதனுடன் கருவேப்பில்லை சேர்க்கவும்.
- அதோடு முழு பட்டமிளகாய் சேர்க்கவும்.
- அதனுடன் தயாரித்த கரைசலை சேர்க்கவும்.
- சிறுது நேரம் மெல்லிய சூட்டில் வைத்து அதனுடன் மல்லிதழையை சேர்க்கவும்.
- சுவையான காசாங்காடு கிராம ரசம் தயார்.
|