தேவையான பொருட்கள்: நண்டு - ஒரு கிலோ சோம்பு - 2 தேக்கரண்டி பூண்டு - 5 பல் புளி - ஒரு எலுமிச்சம்பழம் அளவு வெங்காயம் - 3 நாட்டுத் தக்காளி - 4 மிளகு - ஒரு தேக்கரண்டி சீரகம் - 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி மல்லித் தூள் - 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு சீரகம், சோம்பு, பூண்டு மற்றும் மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி வதக்கி பிறகு அரைத்த மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் போட்டு நன்றாக வதக்க வேண்டும். பிறகு புளியை கரைத்து ஊற்றி, தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதித்த பிறகு நண்டை போட்டு மூடிவிட வேண்டும். நண்டு நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கி மூடி வைக்க வேண்டும். |
குழம்பு >